மயிலாடுதுறை, ஜூலை 6 - நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்திடக் கோரியும், தேசிய அளவிலான பொதுத் தேர்வுகளில் முறைகேடு செய்யும் என்டிஏ-வை ரத்து செய்யக் கோரியும் மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கல்லூரி கிளை நிர்வாகி ராகுல் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ, ஒன்றியச் செயலாளர் பிரவீன், மாநிலக் குழு உறுப்பினர் சுருதி ஆகியோர் உரையாற்றினர்.